Monday, 12 August 2013

முத்தம் கன்னத்தில் கொடுக்க சொன்னால் உதட்டில் முத்தம் கொடுத்த ஹீரோயின் !

மனீஷா யாதவ்  வழக்கு எண் படத்தில் அறிமுகமானவர் .அடுத்தபடியாக சுசீந்திரன் இயக்கிய ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தார். 


இதனால் அந்த படங்களுக்குப்பிறகு மனீஷா முன்னணி நடிகையாகி விடுவார் என்று கருதப்பட்டது. ஆனால் அவர் நாயகியாக நடித்த இரண்டு படங்களுமே வெளியாக தாமதமாகி வருகிறது. இதனால் அடுத்தடுத்து மனீஷாவை படங்களுக்கு புக் பண்ணயிருந்தவர்கள் தயங்கி நிற்கின்றனர்.

இருப்பினும், மைனா விதார்த் நடிக்கும் "பட்டயக்கிளப்பு பாண்டியா" என்ற படத்திற்கு மனீஷாவை புக் பண்ணியுள்ளனர். அதைப்பார்த்து, அவர் நடித்த முதல் இரண்டு படங்களே இன்னும் ரிலீசாகவில்லையே என்று சிலர் அவர்களை பயமுறுத்தியபோதும். 

எங்கள் படத்தை கண்டிப்பாக குறித்த நாளில் ரிலீஸ் செய்து விடுவோம். மேலும், படம் ரிலீசாவதற்கும், நடிப்பவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறிவிட்டார்களாம்.

அதைக்கேட்டு மிகுந்த சந்தோசத்தில் இருக்கிறார் மனீஷாயாதவ். அதனால் இப்படத்தில் கிளாமர் காட்சிகளில் அசத்தி உள்ளாராம் .

மேலும், ஒரு முத்தக்காட்சியில் விதார்த்தின் கன்னத்தில் கொடுக்கச்சொன்னால், உதட்டில் கொடுத்தால்தான் கிக்காக இருக்கும் என்று தானாக முன்வந்து உதட்டு முத்தக்காட்சியில் நடித்து விதார்த்தை திணறடித்து விட்டாராம் மனீஷா.

இதனால், படத்தின் கதையில் ஏதேனும் குற்றம் குறைகள் இருந்தாலும், மனீஷாவின் தாராள கிளாமருக்காகவும், முத்தக்காட்சிகளுக்காகவும் படம் கண்டிப்பாக பெரிய அளவில் வியாபாரமாகிவிடும் என்று அபபடக்குழுவினர் நம்பிக்கையுடன் இருக்கிறார்களாம்.

0 comments:

Post a Comment