This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Tuesday, 3 September 2013

தலை முடியின் பல பிரச்சனைகளும் அதன் தீர்வுகளும்

hair,hair fall,தலை முடி,white hair

முடி உதிர்வதை தடுக்க:

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

வழுக்கையில் முடி வளர:

கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

இளநரை கருப்பாக:

நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

முடி கருப்பாக:

ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.

காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

தலை முடி கருமை மினுமினுப்பு பெற:

அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

செம்பட்டை முடி நிறம் மாற:

மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

நரை போக்க:

தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.

முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.

முடி வளர்வதற்கு:

கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

சொட்டையான இடத்தில் முடி வளர:

நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.

புழுவெட்டு மறைய:

நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.

கங்கம் ஸ்டைலுக்கு ஆடும் குரங்குகள் பார்த்து ரசிங்க

gangam style,monkey,funny,song,dance,animal dance
குரங்குகள் கங்கம் ஸ்டைல் பாடலுக்கு ஆட்டம் போட்டால் எப்படி இருக்கும் .

இதோ உங்கள் கற்பனையை கண்முன் கொண்டு வருகிறோம்

Friday, 30 August 2013

மெக்சிகோ நீதிமன்றில், நீதிபதிகள் மோதல் [வீடியோ]

judge,fight,நீதிபதி,சண்டை
மெக்சிகோ நாட்டின், மோர்லோஸ் நகரில், மேல்முறையீட்டு நீதிமன்றம் உள்ளது.

இந்த நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி, மைக்கேல் ஏஞ்சல் பால்கன் , பணிபுரியும் மற்றொரு நீதிபதி, ரூபன் ஜாசோ.

முக்கிய வழக்கு ஒன்றை, குறிபிடப்பட்டுள்ள இரு நீதிபதிகளும், நேற்று விசாரித்தனர். விசாரணையின் போது, ரூபன் ஜாசோவின் செய்கைகள், மைக்கேலுக்கு பிடிக்கவில்லை.

முதலில் ஜாசோவை, முட்டாள் என திட்டினார். மேலும் ஜாசோ மீது பாய்ந்து, அவரை தாக்கினர் மைக்கேல்.

நீதிமன்றத்தில், அனைவரது முன்னிலையில் இந்த சம்பவம் நடந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.

பின் சுதாரித்து கொண்ட மைக்கேல், தன்னுடைய செய்கைக்காக, நீதிமன்றத்தில் இருந்தவர்களிடம் மன்னிப்பு கேட்டார்.

முக்கிய நீதிமன்றத்தில், மூத்த நீதிபதி மைக்கேல் அநாகரிகமாக நடந்து கொண்டதற்காக அவர் மீது கண்டன தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.

செவ்வாய் கிரகத்தில் வாழ விண்ணப்பம்

மார்ஸ் ஒன் - நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கும் ஒரு திட்டத்தில், 2023 ஆம் ஆண்டில் சிகப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தில் மக்களை நிரந்தரமாக குடியேறி வாழக்கூடிய சாத்தியக்கூறுகள் விளக்கப்பட்டுள்ளன.

அந்த நிறுவனம் அறிவித்திருந்தது படி, ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை செவ்வாய் கிரகத்திற்கு ஒரு வழி பயணமாக செல்ல உலகெங்கிலும் உள்ள சுமார் 1,65,000 பேர் பதிவு செய்துள்ளனர். இந்த பயணத்திற்கு பதிவு செய்ய வேண்டிய இறுதி நாள் ஆகஸ்ட் 31 ஆம் தேதியாகும்.

நிரந்தரமாக செவ்வாய் கிரகத்தில் குடியேற விண்ணப்பித்துள்ள நாடுகள் மற்றும் மக்கள் எண்ணிக்கை , அமெரிக்கா (37,852) ,சீனா (13,124), பிரேசில் (8,686), இந்தியா (8,107), ரஷ்யா (7,138), பிரிட்டன் (6,999), மெக்சிகோ (6,771), கனடா (6,593) ஸ்பெயின் (3,621) மற்றும் பிலிப்பைன்ஸ் (3,516) ,இதில், 8,107 இந்தியர்கள் பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து தெரிவித்த அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர், 140 நாடுகளில் இருந்து விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், தற்போதுள்ள தொழில்நுட்ப முன்னேற்றங்களில் செவ்வாய் கிரகத்தில் வாழ்வது சாத்தியமாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.