Friday, 30 August 2013

செவ்வாய் கிரகத்தில் வாழ விண்ணப்பம்

மார்ஸ் ஒன் - நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கும் ஒரு திட்டத்தில், 2023 ஆம் ஆண்டில் சிகப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தில் மக்களை நிரந்தரமாக குடியேறி வாழக்கூடிய சாத்தியக்கூறுகள் விளக்கப்பட்டுள்ளன.

அந்த நிறுவனம் அறிவித்திருந்தது படி, ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை செவ்வாய் கிரகத்திற்கு ஒரு வழி பயணமாக செல்ல உலகெங்கிலும் உள்ள சுமார் 1,65,000 பேர் பதிவு செய்துள்ளனர். இந்த பயணத்திற்கு பதிவு செய்ய வேண்டிய இறுதி நாள் ஆகஸ்ட் 31 ஆம் தேதியாகும்.

நிரந்தரமாக செவ்வாய் கிரகத்தில் குடியேற விண்ணப்பித்துள்ள நாடுகள் மற்றும் மக்கள் எண்ணிக்கை , அமெரிக்கா (37,852) ,சீனா (13,124), பிரேசில் (8,686), இந்தியா (8,107), ரஷ்யா (7,138), பிரிட்டன் (6,999), மெக்சிகோ (6,771), கனடா (6,593) ஸ்பெயின் (3,621) மற்றும் பிலிப்பைன்ஸ் (3,516) ,இதில், 8,107 இந்தியர்கள் பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து தெரிவித்த அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர், 140 நாடுகளில் இருந்து விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், தற்போதுள்ள தொழில்நுட்ப முன்னேற்றங்களில் செவ்வாய் கிரகத்தில் வாழ்வது சாத்தியமாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment