நாகர்கோவிலில் உள்ள ஒரு வீட்டில் திருட்டி சிடி தயாரிப்பதாக வந்த ரகசிய தகவலை அடுத்து திடீர் சோதனை செய்த போலீசார், 12 கம்ப்யூட்டர் மற்றும் சிடி தயாரிக்க உதவும் உபரகரணங்கள் ஆகியவற்றை கைப்பற்றினர்.
மேலும் சுமார் 7500 சிடிக்களையும் பறிமுதல் செய்தனர். அவைகளில் பெரும்பாலானவை புளுபிலிம்கள் ஆகும்.
அவர்களோடு கோவையை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டார். அவர்தான் புளுபிலிமில் நடித்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
நிஷாந்த், முகமதுபாஷி,சகாயபிரிட்டோ, மணிகண்டன், கங்காசதாசிவம், ரியாஸ், லத்தீப் ஆகிய ஏழு பேரும் நாகர்கோவில் டவுண் டி.எஸ்.பி., உதயகுமாரால் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கைதான இளம்பெண்ணின் பெயரை தெரிவிக்க போலீஸார் மறுத்துவிட்டனர்.
இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.






0 comments:
Post a Comment